அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது.
அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு
Published on

கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டை கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மரத்தில் தூக்குப்போட்டு தொங்கியபடி உடல் அழுகிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மஞ்சப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் கருப்பையன், கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உடலை மரத்தில் தொங்க விட்டு சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com