

தேனி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தேனி உழவர் சந்தையில் நடந்தது. ஊர்வலத்தை துணை இயக்குனர் சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உழவர் சந்தை முதல் பெரியகுளம் சாலை வரை ஊர்வலம் நடந்தது. இதில், வேளாண்மை அலுவலர்கள் கண்ணதாசன், தெய்வம், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.