வைகை அணையில் இருந்து வினாடிக்கு 5,399 கனஅடி உபரிநீர் திறப்பு

வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 5,399 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 5,399 கனஅடி உபரிநீர் திறப்பு
Published on

மதுரை,

தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் கடந்த அக்டோபர் 22-ந்தேதி அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. இதன் பிறகு படிப்படியாக நீர்வரத்து குறைய தொடங்கியது.

இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால், வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 5,399 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து மேலும் அதிகமானால் ஆற்றின் வழியாக திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணி துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com