சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Published on

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது தான் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அந்த மேம்பாலத்தின் அணுகு சாலையோரத்தில் கடைகள் வைத்திருப்பவர்கள் சாலையை ஆக்கிரமித்தும் கடைகளை வைத்திருந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று காலை போலீசார் பாதுகாப்புடன் அந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்றனர். ஆனால் கடைக்காரர்களை தாமாக முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றினர். அவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் உதவினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com