மாநகராட்சி பகுதிகளில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரூர் மாநகராட்சி பகுதிகளில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
மாநகராட்சி பகுதிகளில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

கரூர் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதையடுத்து நேற்று 2-வது நாளாக சாலையோரம் மற்றும் கடைகளின் முன்பு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.இதேபோல் கரூர் ஜவகர்பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் மற்றும் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி, மாநகராட்சி வாகனத்தில் எடுத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com