கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்க்கப்பட்டது.
கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
Published on

பசுமாடு மீட்புஅன்னவாசலை அடுத்த சிப்காட் அருகே சாணிவயலை சேர்ந்தவர் ரத்தினம். இவரது பசுமாடு ஒன்று அப்பகுதியில் உள்ள 60 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com