ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி
Published on

சென்னை,

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர் மற்றும் லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜ மாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

மொத்தமாக ரூ.14.23 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com