சென்னை விமான நிலையத்தில் ரூ.19½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.19½ லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.19½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
Published on

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது துபாயிற்கு செல்ல திருவல்லிகேணியை சேர்ந்த முகமது உசேன் (வயது 30) என்பவர் வந்து இருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தபோது கைப்பையில் மறைத்து வைத்து வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்தி 68 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா. இது தொடர்பாக முகமது உசேனை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com