சுற்றுச்சுவருக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சுற்றுச்சுவருக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் உத்தரவை எதிர்த்த சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
சுற்றுச்சுவருக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில மேல்முறையீட்டு மனுகள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ் தரப்பில ஆஜரான வழக்கறிஞர், அணிவகுப்புக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பின்னர் அதில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது என்பது தவறு. எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.

இதனை தொடர்ந்து, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கின்னுடை மனு நகல்கள் தங்களுக்கு கிடைக்க பெறவில்லை என்பதால், அதை பெற்று விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள், மனுவின் நகலை அரசு தரப்பிற்கு வழங்க உத்தரவிட்டனர். மேலும் அந்த மனுவிற்கு பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கும், காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com