எட்டு வழிச்சாலை அமைக்கப்படுமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

திருவாரூர் சென்ற முதலமைச்சர் பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
எட்டு வழிச்சாலை அமைக்கப்படுமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Published on

திருவாரூர்,

முதல்வர் பழனிசாமி இன்று திருவாரூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது எட்டு வழிச்சாலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:-

  • வெளிநாடுகளில் குறைந்தபட்சமே 8 வழிச்சாலைதான் உள்ளது. நாடு தொழில் வளர்ச்சிக்கு சாலை அவசியம்
  • 8 வழிச்சாலை நீண்ட கால திட்டம், இப்போது தொடங்கினால் கூட முடிய 6 ஆண்டுகளாகும்.
  • 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், நிலம் கையகப்படுத்தியது மட்டுமே மாநில அரசு.
  • விபத்து, கால விரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம்
  • திமுக ஆட்சியில் 17 நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் கொண்டு வந்த போது சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா?
  • 3 வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள்?
  • விருப்பப்பட்டால் மட்டுமே வேளாண் சட்டத்தை தமிழக விவசாயிகள் பயன்படுத்தலாம்.
  • விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம்
  • பயனளிக்கும் என்பதால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழக அரசு வரவேற்கிறது

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com