மணல் கடத்திய டிரைவர் கைது

முக்கூடல் அருகே மணல் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மணல் கடத்திய டிரைவர் கைது
Published on

முக்கூடல்:

பாப்பாக்குடி மேல தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடைய மகன் செல்வம் (வயது 26). இவர் நேற்று வீரவநல்லூருக்கு முக்கூடல் வழியாக லாரியில் முறைகேடாக எம்.சாண்ட் மணல் கடத்திச் சென்றார் அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முக்கூடல் போலீசார், மணலுடன் லாரியை கைப்பற்றி, செல்வத்தையும் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com