கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.
கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா
Published on

சந்தனக்கூடு விழா

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்கா குத்துபுல் ஹஜ்ரத் காஜாசையத் சுல்தான் அலாவுதீன், அவுலியாக்களின் சந்தனக்கூடு உரூஸ் மத நல்லிணக்க விழா நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 6 மணியளவில் உரூஸ் பிறைகொடி பாரம்பரிய ஹக்தார்கள் முன்னிலையில் ஏற்றப்பட்டது.

மாலையில் உரூஸ் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மின்சார விளக்குகள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியம் ஒட்டகம், நாட்டிய குதிரையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை வந்தடைந்தது.

அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் இந்த விழாவை காண உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர்களில் இருந்தும் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.

மின் விளக்கு அலங்காரம்

இதையொட்டி தர்கா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

இறையன்பன் குத்தூஸ், முகவை சீனி முகம்மது, ஜெயபாரதி ஆகியோர்களின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சமசுதீன், சையது ரசூல், சம்சுதீன் அபு, மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் ஆகியோர் செய்தனர்.

விழாவைத்தொடர்ந்து 3 நாட்கள் இன்னிசை கச்சேரிகள் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com