சந்தனக்கூடு உரூஸ் விழா

இடையக்கோட்டை முகையதீன் ஆண்டவர் தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சந்தனக்கூடு உரூஸ் விழா
Published on

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் பிரசித்தி பெற்ற முகையதீன் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு சந்தனக்கூடு உரூஸ் விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி புனிதகொடி ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று, தர்காவுக்கு கொண்டு வரப்பட்டு கொடியேற்றப்பட்டது.

வருகிற 25-ந்தேதி மாலை போர்வை, வாசனை மாலையுடன் ஊர்வலம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 26, 27, 28-ந் தேதிகளில் சந்தனக்கூடு உரூஸ் விழா நடைபெறுகிறது. இந்த 3 நாட்களிலும், இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com