மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை

வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை
Published on

மரவள்ளிக்கிழங்கு

கரூர் மாவட்டம் மரவாபாளையம், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், குந்தாணிபாளையம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை அதிகளவில் பயிரிட்டு உள்ளனர். இங்கு விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கை வாங்கி செல்கின்றனர்.

டன் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை

மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து ரூ.11 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1500 வரை உயர்வடைந்து ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்வடைந்து உள்ளதாகவும் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com