மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம்

வேதாரண்யத்தில் மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம்
மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம்
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் அய்யாதுரை தலைமை தாங்கினார். அம்பாள் குணசேகரன் முன்னிலை வகித்தார். செயலாளர் கருப்பம்புலம் சித்திரவேலு வரவேற்று பேசினார். கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்தும், அதை அடையவேண்டிய செயல்பாடுகள், கடமைகள் குறித்தும் முன்னாள் தலைவர் பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் உரையாற்றினர். கூட்டத்தில் அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி ரெயில் சேவை, ரேஷன் கடை மற்றும் வங்கி சேவைகளில் காணப்படும் பொதுவான குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கபொருளாளர் செல்வராசு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com