

சென்னை,
காவல்துறையில் 10 முக்கிய உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்.பி.யாக சுஜாதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.