படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது தவறி விழுந்தார்: பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

மாநகர பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவன் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது தவறி விழுந்தார்: பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி
Published on

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் முத்துமாரியம்மன் கோவில் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஆர்யா (வயது 14). இவர், மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த மாதம் 8-ந் தேதி தாம்பரத்தில் இருந்து அடையாறு செல்லும் மாநகர பஸ்சில் மாணவன் ஆர்யா பயணம் செய்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக மாணவன் ஆர்யா, நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் இடுப்பு மற்றும் கால்களில் பலத்த காயம் அடைந்த அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாணவர் ஆர்யா, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 28 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த மாணவர் ஆர்யா, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் புறநகர் பகுதிகளில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் உள்பட யாரும் பயணம் செய்யாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசாருக்கும், மாநகர பஸ் நிர்வாகத்துக்கும் வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com