தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி

திண்டுக்கல்லில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது.
தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி
Published on

தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி, திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் 50 கிலோ முதல் 80 கிலோ எடை வரை 11 பிரிவுகளில் போட்டி நடந்தது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆக்கி சங்க தலைவர் என்.எம்.பி.காஜாமைதீன், முதலிடம் பிடித்தவருக்கு பரிசாக ரூ.10 ஆயிரம், கேடயம், பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் முஜிப்ரகுமான், சமூக ஆர்வலர்கள் கணேசன், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுரேஷ்குமார், ஜெகநாதன், முகமதுஉஸ்மான் ஆகியோர் செய்து இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com