தி.மலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு கட்டணம் ரத்து.!

சிறப்பு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த கட்டணம் ரத்துசெய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
தி.மலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு கட்டணம் ரத்து.!
Published on

திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இங்கு ஈசன் மலை உருவில் ஜோதி வடிவில் அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்தந் இலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய நடைமுறையில் இருந்த சிறப்பு கட்டணம் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. பௌர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோவிலில் இனி பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்துகொள்ளலாம்.

சிறப்பு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த கட்டணம் ரத்துசெய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com