சிறப்பு கிராமசபை கூட்டம்

நாங்குநேரி அருகே இறைப்புவாரி பஞ்சாயத்து பட்டர்புரத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு கிராமசபை கூட்டம்
Published on

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் இறைப்புவாரி பஞ்சாயத்து பட்டர்புரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சமூக தணிக்கை நடைபெற்று சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இறைப்புவாரி பஞ்சாயத்து தலைவர் மோகனா யோசுவா தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், வட்டார வளமைய பயிற்றுனர் மாதர்செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வினோலியா மனோரஞ்சிதம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பேபி மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com