மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
Published on

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களின் நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம். கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் சேர்த்து நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com