சிறுபான்மையினரை காக்க சிறப்பு சட்டம்: தேர்தல் அறிக்கை வெளியிட்டார் விசிக தலைவர் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
சிறுபான்மையினரை காக்க சிறப்பு சட்டம்: தேர்தல் அறிக்கை வெளியிட்டார் விசிக தலைவர் திருமாவளவன்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

* சிறுபான்மையினரை காக்க சிறப்பு சட்டம்

* ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றுதல்

* மருத்துவத்தை அடிப்படை உரிமையாக மாற்றுதல்

* தனியார் துறையிலும் இடஒதுக்கீடு மூலம் சமூகநீதியை உறுதி செய்தல்

* மது மற்றும் போதைப்பொருட்களை முழுமையாக ஒழித்தல்

* இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுதல்

* இருமொழி கொள்கையை உறுதிப்படுத்துதல்

* கடல், காடு, கனிம வளங்கள் அனைத்தும் மக்களுக்கே உரியவை என்ற கொள்கை

* விலையில்லா கல்வி

* மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு

* மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு

* உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம்

* காவல்துறை மற்றும் சிறைத்துறையில் சீர்திருத்தம்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com