பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பொள்ளாச்சியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
Published on

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பொள்ளாச்சியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பொள்ளாச்சி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ராமர் பண்ணை கிருஷ்ணர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மலை ஏறி தரிசனம்

பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாளுக்கு பால், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

அங்கலகுறிச்சி அருகே உள்ள மலை உச்சியில் உள்ள நந்தகோபால்சாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மலை ஏறி வந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று பாலக்காடு ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், டி.கோட்டாம்பட்டி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com