எர்ணாகுளம்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எர்ணாக்குளத்தில் இருந்து வரும் அக்டோபர் 5-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06147), போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 8.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து இன்று (திங்கட்கிழமை), அக்டோபர் 6 ஆகிய தேதிகளில் இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் வரும் சிறப்பு ரெயில் (06148), இதே வழித்தடம் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






