அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா

நாகையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
Published on

அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், நகர செயலாளர் தங்க.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுறுவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக கட்சி கொடி ஏற்றப்பட்டு தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com