

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டாமங்கலம் கிராமத்தில் ஒரு விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் மான் ஒன்று இறந்து கிடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள், இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து புள்ளிமானின் உடலை மீட்டு, வனப்பகுதியில் புதைத்தனர்.