எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு; 42 ஆயிரம் பேர் ஆப்சென்ட்- பள்ளிக் கல்வித்துறை தகவல்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இன்று நடைபெற்ற மொழிப்பாட தேர்வை 42,024 மாணவர்கள் எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள்.
மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள்.
Published on

சென்னை,

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்படாமல், ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடத்தப்பட்டது.

அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கிய கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது 2 ஆண்டு இடைவெளிக்கு பின் நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்று நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 42,024 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com