மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடத்த பட உள்ளது.
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி
Published on

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன் முதலாக மாணவர்களுக்கு இடையே தமிழ்நாடு அளவில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடத்த பட உள்ளது. இந்த போட்டியை மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், தனியார் அமைப்பும் இணைந்து வருகின்ற 19-ந்தேதி (ஞாயிற்று கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெறும் போட்டியில் வெற்றி பெரும் மாணவ-மாணவிகளுக்கு வெற்றிக்கோப்பையும் மற்றும் 3 நபர்களுக்கு சைக்கிள், ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் பள்ளியை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com