கிணற்றில் குதித்து பள்ளி மாணவன் தற்கொலை

சேந்தமங்கலம் அருகே பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த பள்ளி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
கிணற்றில் குதித்து பள்ளி மாணவன் தற்கொலை
Published on

சேந்தமங்கலம்

பள்ளி மாணவன்

சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சசிகலா. இவர்களுடைய மகன் விஷ்ணுப்பிரியன் (வயது 13). அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று காலை அவனை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விஷ்ணுப்பிரியன் மனம் உடைந்தநிலையில் இருந்ததாக தெரிகிறது.

வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் மகனை காணாமல் தவித்தனர். அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் விஷ்ணுப்பிரியனின் செருப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பெற்றோர் எண்ணினர்.

உடல் மீட்பு

இதுகுறித்து அவர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி விஷ்ணுப்பிரியனின் உடலை மீட்டனர்.

அப்போது மாணவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த விஷ்ணுப்பிரியன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com