அண்ணா கோளரங்கத்தை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்

அண்ணா கோளரங்கத்தை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
அண்ணா கோளரங்கத்தை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்
Published on

திருச்சி அண்ணா கோளரங்கத்துக்கு விடிவெள்ளி பள்ளியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகள் கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கோளரங்கத்தை சுற்றி பார்த்த மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன், கோள்களின் முக்கியத்துவம் குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும் விளக்கம் அளித்தார். இதற்கான ஏற்பாட்டை பிஷப்ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை மாணவி கன்னிஷா செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com