சென்னையில் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை பள்ளிக்கரணையில் வீட்டில் தனியாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சென்னை,

சென்னை பள்ளிக்கரணை நியூ காலனி முதல் தெருவை சேர்ந்த பாலாஜி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மனைவி கீதா (வயது 48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை:

நேற்று காலை பாலாஜி வேலைக்கும், மகள், மகன் இருவரும் ஓட்டுனர் பயிற்சி வகுப்புக்கும் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடல்நிலை பாதிப்பு:

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கீதா கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com