பெண் சாவில் திடீர் திருப்பம் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தது அம்பலம் - நாடகமாடிய கணவரிடம் போலீஸ் விசாரணை

பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவர், பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தது தெரிந்தது. வயிற்று வலியால் இறந்ததாக நாடகமாடிய அவரது கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண் சாவில் திடீர் திருப்பம் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தது அம்பலம் - நாடகமாடிய கணவரிடம் போலீஸ் விசாரணை
Published on

சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மனைவி கவிதா (வயது 36). இவர், கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கவிதாவுக்கு கர்ப்பப்பையில் கட்டி வந்து அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயிற்று வலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

ஓட்டேரி போலீசார் அவரது உடலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை செய்யும் போது கவிதாவின் ஜாக்கெட்டில் ஒரு கடிதம் இருப்பதை டாக்டர் வினோத் பார்த்துள்ளார். அதில் தனது சாவுக்கு வீட்டருகே வசிப்பவர் மற்றும் அவரது உறவினர்கள் காரணம் என்று எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கவிதாவின் சொந்த ஊரான ஏலகிரியில் அவரது உடலை அடக்கம் செய்துவிட்டு 15 நாட்கள் கழித்து பாலசுப்ரமணி சென்னை வந்தார். ஓட்டேரி போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் ரஞ்சித்துடன் கவிதாவுக்கு தொடர்பு இருந்ததாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கவிதா தாக்கப்பட்டதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆனால் வெளியே சொன்னால் அவமானம் என நினைத்து வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறியதும் தெரிந்தது. இதுபற்றி ஓட்டேரி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com