கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரம் பூமலை நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகேந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com