வேலகவுண்டம்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வேலகவுண்டம்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள எறையம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணமாகாத 2 மகள்களும் வீட்டில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த பழனிசாமி நேற்று முன்தினம் தனது மகளுக்கு போன் செய்து விஷம் குடித்து விட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகள் உடனடியாக வீட்டுக்கு சென்று தந்தையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com