தமிழகத்தில் இருந்து மும்பைக்கு கோடை சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து மும்பைக்கு கோடை கால கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை கால பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க மத்திய ரெயில்வே பின்வரும் சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது:
*மும்பையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 01015 ) ஏப்ரல் மாதம் 09, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) காலை 12.50 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும். அதே நாளில் இரவு 23.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
*மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து மும்பைக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 01016 ) ஏப்ரல் மாதம் 10, 17, 24 மற்றும் மே 01 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இந்த ரெயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு மும்பை சென்றடையும்.
பெட்டிகள் அமைப்பு: 1- ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, 5- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 10- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஆகிய பெட்டிகள் உள்ளன.
*மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 01005) ஏப்ரல் 09, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) காலை 12.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும். இந்த ரெயில் மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
*கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 01006) ஏப்ரல் 10, 17, 24 மற்றும் மே 01 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும். இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு மும்பை சென்றடையும்.
பெட்டிகள் அமைப்பு: 4- ஏசி இரண்டு அடுக்கு பெட்டிகள், 6- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 4- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1- லக்கேஜ் கம் பிரேக் வேன் ஆகிய பெட்டிகள் உள்ளன.
மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு 30.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.00 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






