பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா - தமிழக போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் இயங்கும் தனியா பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் ஜி.பி.ஆா.எஸ் கருவிகள் கட்டாயமாகப் பொருத்த வேண்டுமென போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா - தமிழக போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் தனியா பள்ளிகளுக்கு சொந்தமான 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வாகனம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டறிவதற்கு தேவையான ஜி.பி.ஆா.எஸ் கருவியையும் பொருத்த வேண்டும் என சென்னை உயா நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜி.பி.ஆா.எஸ் கருவிகள் பொருத்துவது குறித்து விளக்கமளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டனா.

இதையடுத்து, அனைத்து தனியா பள்ளி வாகனங்களிலும் கேமிராக்கள் மற்றும் ஜி.பி.ஆா.எஸ் கருவிகள் பொருத்த வேண்டும் என, தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அனைத்து தனியா பள்ளி நிவாகத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்நிலையில், இதே உத்தரவை கடைப்பிடிக்குமாறு பள்ளிகளுக்கு தமிழக போக்குவரத்துத் துறையும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவால் மாணவ மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com