பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
Published on

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் உள்ள பால விநாயகர், பாவாடைராயர், பைரவி, நாகாத்து அம்மன், பாலமுருகன் ஆகிய பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளியுள்ள பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 7-ம் நாளான நேற்று மாலை கோவிலில் பூச்சொரிதல் மற்றும் இரவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக பெரியநாயகி அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com