பட்ஜெட் மீதான 2-வது நாள்; தமிழக சட்டசபை கூடியது

தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல, நம் உயிர், பேசினால் ஓசை மட்டும் இல்லை, உணர்வும் வரும் என முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.
பட்ஜெட் மீதான 2-வது நாள்; தமிழக சட்டசபை கூடியது
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில், 2 நாள் விடுமுறை முடிந்து தமிழக சட்டசபை காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் இரங்கல் குறிப்புவாசிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழ கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதாவது,

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்று சட்டசபையில் அரசு தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்து பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com