பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு நூல் கொள்முதல்; டெண்டர் கோரிய தமிழக அரசு

பொங்கல் பண்டிகைய ஒட்டி ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு நூல் கொள்முதல்; டெண்டர் கோரிய தமிழக அரசு
Published on

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுகு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம்

அந்த வகையில், 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டட்திற்கு சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை டெண்டர் கோரியுள்ளது.

டெண்டர் இறுதியானதும் ஜூலை மாத இறுதியில் வேட்டி,சேலை உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com