

சென்னை,
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டு பிறந்துள்ளது.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புத்தாண்டையொட்டி பக்தர்கள் கோவில்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.