டய்லர் தற்கொலை

பாலக்கோடு அருகே டெய்லர் தற்கொலை செய்து கொண்டார்.
டய்லர் தற்கொலை
Published on

காரிமங்கலம்:-

பாலக்கோடு அருகே கல்கூடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சபரி (வயது 32). டெய்லரான இவருக்கு தாய்- தந்தை இல்லை. கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் தான் வேலை பார்த்த கார்மெண்ட்ஸ் நிறுவன உரிமையாளரிடம், பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டதாக செல்போனில் கூறியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மூலம் சபரியை மீட்டு அனுமந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com