அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பரமத்திவேலூர்

அரசு பள்ளி ஆசிரியை

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 55). இவரது மனைவி உமாதேவி (50). இவர்களுக்கு ஜெயக்குமார் என்ற மகனும், விஜயபிரியா என்ற மகளும் உள்ளனர். மகன் கல்லூரியில் 2-ம் ஆண்டும், மகள் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். உமாதேவி ஏத்தாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உமாதேவி நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். தாய் வீட்டிற்கு வந்த அவர் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் கழிவறைக்கு சென்ற உமாதேவி வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் கழிவறைக்கு சென்று கதவை தட்டி உமாதேவியை அழைத்துள்ளனர்.

தூக்குப்போட்டு

ஆனால் அவர் வெளியே வராததால் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது உமாதேவி கழிவறைக்கு உள்ளே இருந்த இரும்பு கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உமாதேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com