குடிபோதை தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

குடிபோதை தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதை தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து
Published on

குடிபோதை தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்திக்குத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தேரடி வீதியில் காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.

இந்த நிலையில் இன்று மாலை தேரடி வீதியில் குடிபோதையில் 3 பேர் வந்தனர். அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த 3 பேரில் ஒருவர் அங்கிருந்த தள்ளு வண்டியில் இருந்து கத்தி ஒன்றை திடீரென எடுத்து அதனை மற்றொரு நபரின் மீது சரமாரியாக குத்தினார். இதில் அந்த நபர் படுகாயம் அடைந்து சரிந்து கீழே விழுந்தார்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

2 பேரை பிடித்து விசாரணை

மேலும் அவருடன் தகராறில் ஈடுபட்ட மற்ற 2 பேரை போலீசார் பிடித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் படுகாயம் அடைந்த நபர் திருவண்ணாமலை பேகோபுர தெருவை சேர்ந்த பிரேம் (வயது 28) என்பது தெரியவந்தது.

மேலும் பிடிபட்ட 2 நபர்களும் குடிபோதையில் இருப்பதால் அவர்களின் விவரம் மாற்றி மாற்றி கூறுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com