கற்பக விநாயகர், வேம்புடைஅய்யனார் கோவில் குடமுழுக்கு

முத்துப்பேட்டை அருகே கற்பக விநாயகர், வேம்புடைஅய்யனார் கோவில் குடமுழுக்கு நடந்தது
கற்பக விநாயகர், வேம்புடைஅய்யனார் கோவில் குடமுழுக்கு
Published on

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை அருகே உள்ள மேலப்பெருமழை கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், வேம்புடைஅய்யனார், திருவார்குழலி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை பூர்ணாகுதி நிறைவு பெற்ற பின்னர் பூஜை செய்யப்பட்ட கலச நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. விழாவில் சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com