தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு

சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்க ஏலம் அறிவிக்கப்படுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏலத்தை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க விரும்பும் தொழில் முனைவோர் நாளை மாலை 2 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 3 மணிக்கு ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ பிரிவில் 8 கடைகள் அமைக்க ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 2,25 லட்சமும், பி பிரிவில் 17கடைகள் அமைக்க தலா ரூ. 4 லட்சமும், சி பிரிவில் 15 கடைகள் அமைக்க தலா ரூ. 5.60 லட்சமும், டி பிரிவில் 10 கடைகள் அமைக்க தலா ரூ. 3 லட்சமும் குறைந்தபட்ச வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏலம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com