அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் உடல்

அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் உடல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் உடல்
Published on

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள உடும்பியத்தில் பெரம்பலூர் -ஆத்தூர் நெடுஞ்சாலையிலுள்ள பாலத்தின் அடிப்பகுதியில் அழுகிய நிலையில் வாலிபரின் உடல் கிடப்பதாக நேற்று அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 27) என்பதும், திருமணம் ஆகாத இவரின் தாய் மற்றும் தந்தை இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அதே ஊரைச்சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்ததும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பாததும் தெரிய வந்தது. இறந்த பிரபாகரனின் உடலுக்கு அருகில் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கிடந்ததால் பிரபாகரன் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து காயம் அடைந்து அங்கேயே இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கி வீசி சென்றனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com