இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

மாணவரை தாக்கியவரை கைது செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயற்சி போலீசார் பேச்சுவார்த்தை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயற்சி
Published on

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 2 மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் ஒருவருக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை தாக்கிய இன்னொரு மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாணவரை தாக்கிய மேலும் ஒரு மாணவரை கைது செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பள்ளி வளாகம் முன்பு திரண்டனர். இதை அறிந்து அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இந்த சம்பவத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com