மயங்கி விழுந்த விவசாயி சாவு

கம்மாபுரம் அருகே மயங்கி விழுந்த விவசாயி சாவு இறந்தார்.
மயங்கி விழுந்த விவசாயி சாவு
Published on

கம்மாபுரம்,

கம்மாபுரத்தை அடுத்த கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 58). விவசாயியான இவர் சம்பவத்தன்று வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அருகில் நின்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சோத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com