விடுதலை வேட்கையை விதைத்த தீரர் மாவீரர் தீரன் சின்னமலை - தவெக தலைவர் விஜய்

தீரன் சின்னமலையை போற்றி வணங்குகின்றேன் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
விடுதலை வேட்கையை விதைத்த தீரர் மாவீரர் தீரன் சின்னமலை - தவெக தலைவர் விஜய்
Published on

சென்னை,

மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அரசியல் கட்சி தலைவர்கள் பலர், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தீரன் சின்னமலையின் வீரத்தை போற்றியும் வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தாய்மண்ணை மீட்க, தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர், இறுதி மூச்சுவரை விடுதலைக்காக போராடி, துணிச்சலோடு தூக்குமேடை ஏறி, விடுதலை வேட்கையை விதைத்த தீரர், மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரை போற்றி வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com