வீடு தீப்பிடித்து எரிந்தது

வீடு தீப்பிடித்து எரிந்தது.
வீடு தீப்பிடித்து எரிந்தது
Published on

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). நேற்று பெருமாள் குடும்பத்துடன் வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் சிமெண்டு அட்டையால் மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த பெருமாளின் வீடு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பீரோ அதில் இருந்த பொருட்கள், துணிகள், கட்டில், மளிகை பொருட்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள் வீட்டில் எப்படி தீப்பிடித்தது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com